Breaking News

தனிமனித வழிபாடு

தனிமனித வழிபாடு
அல்ஜன்னத் மாத இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய கட்டுரை - தேவையான திருத்தங்களுடன்

இன்றைக்கு மார்க்க அறிஞர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் உலமாக்கள்,  ஏழாண்டுகாலம் மதரஸாக்களில் காலம் கழித்த உலமாக்கள் மற்ற விஷயங்களை ஏற்றுக் கொள்ளத் தயாராகஇருந்தாலும் மத்ஹபு விஷயத்தில் மட்டும் இவ்வளவு பிடிவாதம் பிடிக்க வேண்டிய காரணம் என்ன?
பல மவ்லவிகளை நாம் சந்தித்துப் பேசும் போது நீங்கள் சொல்வது சரி தான்ஆனால் இந்த மத்ஹபுவிஷயத்தை நீங்கள் எழுதியிருக்கக் கூடாதுஅதைத் தான் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்றுநம்மிடம் கூறுகின்றனர்.
மதரஸாக்களுக்குச் செல்லாதவர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளும் இந்த உண்மையை மதரஸாசென்றவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் போவதற்குக் காரணமென்னமிகமிக முக்கியமான காரணம்இட்டுக் கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்களை இவர்கள் நம்பியதும் , நம்ப வைக்கப்பட்டதுமே ஆகும்.
தனி நபர்கள் மீது ஏற்பட்ட காரணமற்ற பக்தியின் காரணமாக அவர்களைச் சிறப்பித்து பொய்யானஹதீஸ்களை உருவாக்கி அதை நம்ப வைத்து விட்டார்கள்முதன் முதலில் அலி (ரலி)அவர்களை உயர்த்தியும் அபூபக்ர் (ரலி)உமர் (ரலி)உஸ்மான் (ரலிஆகியோரைத் தாழ்த்தியும் ஷியாக்கள் பலபொய்யான ஹதீஸ்களை நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் பெயரால் உலவ விட்டனர்இஸ்லாமிய வரலாற்றில் உருவாக்கப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் முதன் முதலில் இந்தஷியாக்களாலேயே தயாரிக்கப்பட்டன.
ஷியாக்களின் அதே வழிமுறையைப் பின்பற்றி இமாம்கள் பற்றி மத்ஹபு வாதிகள் பல ஹதீஸ்களைத்தயாரித்தனர்தங்களின் இமாம்களை உயர்த்துவதற்காக ஏனைய இமாம்களைத் தாழ்த்திஉருவாக்கப்பட்ட ஹதீஸ்களும் உள்ளன.
இந்தப் பொய்யான ஹதீஸ்கள் மதரஸா செல்லும் பிஞ்சு உள்ளங்களில் ஆழமாகப் பதிக்கப்பட்டுவிட்டதால் தான் மத்ஹபு வெறியிலிருந்து மவ்லவிகள் விடுபட யோசிக்கிறார்கள்.
மதரஸாக்களில் ஐந்தாம் வகுப்புக்குச் சட்ட நூல் என்று ஓதிக் கொடுக்கப்படும் துர்ருல் முக்தாரிலும்அதன் விரிவுரையான ரத்துல் முக்தாரிலும்  முன்னுரையில் இத்தகைய பொய்யான ஹதீஸ்கள்கூறப்பட்டு இமாம்கள் மீது பக்தி ஊட்டப்படுகின்றதுஅதை உண்மை என்று நம்பிய காரணத்தாலேயேஇமாம்கள் தனிநபர் வழிபாட்டிலிருந்து  விடுபட மவ்லவிகள் தயங்குகின்றார்கள்.
وعنه عليه الصلاة والسلام (إن آدم افتخر بي وأنا أفتخر برجل من أمتي اسمه نعمان وكنيته أبو حنيفة، هو سراج امتيالدر المختار [1 /56]
ஆதம் (அலை) அவர்கள் என் மூலம் பெருமை அடைந்தார்கள்நான் என் உம்மத்தில் வருகின்ற நுஃமான் எனும் இயற்பெயர் கொண்ட அபூஹனீபாவைக் கொண்டு பெருமையடைவேன். அவர் என் சமுதாயத்துக்கு விளக்காவார் என்று நபி (ஸல்) கூறியதாக அந்த துர்ருல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது.
) وعنه عليه الصلاة والسلام (إن ساير الانبياء يفتخرون بي، وأنا أفتخر بأبي حنيفة، من أحبه فقد أحبني، ومن أبغضه فقد أبغضني)
எல்லா நபிமார்களும் என் மூலம் பெருமை அடைந்தனர். நான் அபூஹனீபா மூலம் பெருமை பெறுகிறேன். அவரை யார் விரும்புகிறாரோ அவர் என்னை விரும்புகிறார். அவரை யார் வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுக்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் துர்ருல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது.
சாதாரண அறிவு படைத்தவனுக்கும் பச்சைப் பொய் என்று தெளிவாகத் தெரியக்கூடிய இந்த ஹதீஸ்மவ்லவிகளின் சிறு பருவத்திலேயே போதிக்கப்பட்டால் எப்படி அவர்கள் மத்ஹபிலிருந்துவிடுபடுவார்கள்.?
ஆதம் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மூலம் பெருமையடைந்தார்கள் என்றால் அதில்நியாயமிருக்கிறதுநபி (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை விட உயர்வானவர்கள்அவர்கள்மூலம் ஆதம் (அலை)அவர்கள் பெருமையடையலாம்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் அபூஹனீபாவைக் கொண்டு பெருமை அடைகிறார்கள் என்றால் நபி (ஸல்)அவர்களை விடவும் அபூஹனீபா இமாம் அவர்கள் அல்லவா உயர்ந்த அந்தஸ்துக்கு போகின்றார்கள்.
நபி ஸல் அவர்களுக்கு இல்லாத அந்தஸ்து அபூஹனீபா அவர்களுக்கு இருப்பதாகவும் அதன் மூலம்தான் நபி ஸல் அவர்கள் பெருமையடைய இருக்கின்றார்கள் என்றும் கூறும் இந்த விஷக் கருத்துபலமாகப் பதித்து விட்டதனால் தான் மவ்லவிகள் அதை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் பெயரையே பயன்படுத்தி நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி, அவர்களை விடஇமாமை உயர்வாகக் காட்டும் இந்தப் பொய்யைத் தான் எல்லா மதரஸாக்களும் சட்ட நூலாக ஒப்புக்கொண்ட துர்ருல் முக்தாரில் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு செய்தியை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாகச் சொல்வது என்றால் அதன்அறிவிப்பாளர்கள் யார்எந்த ஹதீஸ் நூலில் இடம் பெற்றுள்ளதுஅறிவிப்பாளர்களின் தகுதி என்னஎன்றெல்லாம் ஆதாரம் இருக்க வேண்டும். இத்தகைய ஆதாரத்துடன் தான் எந்த நபிமொழியையும் எடுத்துக் காட்ட வேண்டும். ஆனால் மேற்கண்ட செய்திக்கு இது போன்ற எந்த ஆதாரத்தையும் அந்த நூலில் எடுத்துக் காட்டப்படவில்லை.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக மொட்டையாகக் அந்த நூலில் கூறப்படுகிறது.
இவர்கள் இத்துடன் நின்று விடவில்லைஅல்லாஹ்வின் பெயராலும் பொய்யைக் கூறி தங்கள்இமாமை உயர்த்த எண்ணுகின்றனர்அதே துர்ருல் முக்தார் முன்னுரையில் இடம் பெற்றுள்ளமற்றொரு பொய்யைக் காண்போம்.
ولها قصة مشهورة وفي حجته الاخيرة استأذن حجبة الكعبة بالدخول ليلا، فقام بين العمودين على رجله اليمنى ووضع اليسرى على ظهرها حتى ختم القرآن، فلما سلم بكى وناجى ربه وقال: إلهي ما عبدك هذا العبد الضعيف حق عبادتك، لكن عرفك حق معرفتك فهب نقصان خدمته لكمال معرفته، فهتف هاتف من جانب البيت: يا أبا حنيفة قد عرفتنا حق المعرفة وخدمتنا فأحسنت الخدمة، قد غفرنا لك ولمن اتبعك ممن كان على مذهبك الى يوم القيامة.
الدر المختار [1 /55]
அபூ ஹனீபா அவர்கள் கஃபாவின் காவலாளியிடம் கஃபாவின் உள்ளே செல்ல ஒரு இரவில் அனுமதி கேட்டார்கள். இரண்டு தூண்களுக்கிடையில் வலது காலில் நின்றார்கள். இடது காலை வலது கால் மீது வைத்துக் கொண்டார்கள். இந்த நிலையில் குர்ஆனை ஓதி முடித்தார்கள். ஸலாம் கூறியதும் அழுதார்கள். தமது இறைவனிடம் இரகசியமாக உரையாடினார்கள். என் இறைவா இந்த அடியான் உன்னை வணங்க வேண்டிய விதத்தில் வணங்கவில்லை. எனினும் உன்னை அறிய வேண்டிய விதத்தில் அறிந்துள்ளேன். எனவே இந்த அடியானின் முழு ஞானம் காரணமாக இவரது வணக்கத்தில் உள்ள குறைபாடுகளை மன்னித்து விடு என்று துஆ செய்தார்கள். அப்போது கஃபாவின் ஒரு பகுதியில் இருந்து அவர்களை நோக்கி அபூஹனீபாவே நம்மை விளங்க வேண்டியவிதத்தில் விளங்கிக் கொண்டீர்உம்மையும் உம்மைப் பின்பற்றியவர்களையும் கியாம நாள் வரைமன்னித்து விட்டேன் என்று அசரீரியில் அல்லாஹ் கூறினானாம்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பின் தங்களின் இமாமுக்கும் வஹீ வந்திருக்கிறது; அதுவும் அவரைப்பின்பற்றியவர்களை கியாம நாள் வரை மன்னிக்கும் உத்திரவாதத்துடன் வஹீ வந்திருக்கிறது என்றுசிறு பருவத்திலேயே நம்ப வைத்து விட்டார்கள்.
இமாம் அபூஹனீபா அவர்களிடம் அல்லாஹ்வே நேரடியாக உரையாடி விட்டான் என்று நம்ப வைக்கப்பட்டவர்கள்- கியாம நாள் வரை அவரைப் பின்பற்றியவர்களுக்கு மன்னிப்பு உண்டு என்றுஅல்லாஹ் உத்தரவாதம் தருவதாக நம்பியவர்கள் -எப்படி அதிலிருந்து விடுபட முடியும்இது போன்றகதைகளை மதரஸா சென்றவர்கள் மட்டுமே அறியமுடியும்.
யகூனு ஃபீ உம்மதீ ரஜூலுன் யுகாலுலஹூ முஹம்மத் இப்னு  இத்ரீஸ்ஹூவ அழர்ரு அலாஉம்மதீ மின் இப்லீஸ் வயகூனு ஃபீ உம்மதீ ரஜூலுன் யுகாலு லஹூ அபூஹனீபா ஹூவ சிராஜூஉம்மதீ என்று நபி ஸல் அவர்கள் கூறியதாகவும் கதை கட்டியுள்ளனர்.
பொருள்என் உம்மத்தில் முஹம்மத் இப்னு இத்ரீஸ்  (அதாவது ஷாபி இமாம்என்று ஒருவர்தோன்றுவார்இப்லீஸை விட என் சமுதாயத்திற்கு அவர் கேடு செய்வார்மேலும் என் சமுதாயத்தில்அபூஹனீபா என்று ஒருவர் தோன்றுவார்அவர் என்சமுதாயத்தின் விளக்கு ஆவார் என்று நபி ஸல்அவர்கள் கூறினார்களாம்.
ஒரு தனி மனிதர் மீது ஏற்பட்ட பக்தி இன்னொரு இமாமை இப்லீஸை விட கெட்டவர் என்று கூறும்அளவுக்குச் சிலரை ஆக்கி விட்டதுஅதுவும் நபி (ஸல்) அவர்கள் தான் இப்படிச் சொன்னார்கள் என்றமுத்திரையுடன்..
இதை அறிவிப்பவர்களில் மஃமூன் இப்னு அஹ்மத் என்ற பெரும் பொய்யனும்அஹ்மத் இப்னுஅப்துல்லாஹ் அல் ஜூவைபாரி என்ற பொய்யனும் இடம் பெறுகின்றனர்இவ்விரு பொய்யர்களில்யாரோ ஒருவர் தான் இதை இட்டுக் கட்டியிருக்கின்றனர் என்று ஹதீஸ்கலை மேதை இப்னுல் ஜவ்ஸிஅவர்கள் தமது மவ்லூஆத் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
மஃமூன் என்ற பொய்யனிடம் ஷாபி இமாமையும் அவரைச் சார்ந்தவர்களையும் பற்றி நீர் என்னகருதுகிறீர்என்று கேட்கப்பட்ட போது மேற்கூறிய பொய்யான ஹதீஸைஅவன் கூறினான். மஃமூன்என்ற பொய்யனே இதை இட்டுக் கட்டி இருக்க முடியும் என்று இமாம் ஹாகிம் அவர்கள் தனதுஅல்மத்ஹல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்மேலும் சிறிதளவாவது அறிவு உள்ளஒவ்வொருவனுக்கும் நபி ஸல் அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பெரும் பொய் இது என்றுதெளிவாகத் தெரியும் எனக் குறிப்பிடுகிறார்கள்.
ஸூயூத்தி அவர்கள் அல்லஆலில் மஸ்னூஆ என்ற நூலில் முதல் பாகத்தில் 457 ஆம் பக்கத்தில்இதைப் பொய்யென நிரூபித்துள்ளார்கள்மேலும் பல அறிஞர்களும் இதைப் பொய்யெனநிரூபித்துள்ளனர்இவ்வளவு தெளிவாகப் பொய் என்று அறிஞர்கள் முடிவு செய்த பின்பும் ஹனபிஅறிஞர்கள் பலர் இதை சரி காணவே முயற்சிக்கிறார்கள்.
ரத்துல் முக்தார் ஆசிரியர் இது சரியான ஹதீஸ் என்று சாதிக்கிறார்மேற்கூறிய அறிஞர்கள் எல்லாம்அபூஹனீபா அவர்கள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியினால் இதைப் பொய் என்று கூறுவதாகத்தெரிவிக்கிறார்ஐனீ போன்ற அறிஞர்களும் இதிலிருந்து தப்பவில்லைஹதீஸ் கலை மேதைகள்அறிவிப்பாளர்களின் தராதரத்தை எடை போட்டு தக்கக் காரணங்களுடன் அடையாளம் காட்டியுள்ளதைஒரு ஆதாரமுமின்றி இந்த ஹனபீ அறிஞர்கள் மறுக்கிறார்கள்.
இந்தக் குருட்டுப் பக்தி ஏற்பட்டு விட்டதால் தான் தங்கள் இமாம் சொன்னதில் தவறே ஏற்படாது என்றுநம்புகின்றனர்தவறே ஏற்பட்டாலும் கியாம நாள் வரைக்கும் அல்லாஹ் அதை மன்னித்து விடுவான்என்றும் நம்புகின்றனர்மற்றொரு இமாமை இப்லீஸை விட மோசமானவர் என்று நம்புவதால் தான்அந்த இமாமுடைய எந்தக் கருத்தையும் நாம் ஏற்கக் கூடாது என்ற அளவுக்கு தங்களை மாற்றிகொண்டு விட்டார்கள்.
وقد جعل الله الحكم لاصحابه وأتباعه من زمنه الى هذه الايام، الى أن يحكم بمذهبه عيسى عليه السلام،
الدر المختار [1 /60]
ஈஸா அலை அவர்கள் நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதல் படி தீர்ப்பு வழங்குவார்கள் என்றிருக்கஇமாம் அபூஹனீபா அவர்களைப் பின்பற்றி ஹனபி மத்ஹபின் அடிப்படையிலேயே தீர்ப்புவழங்குவார்களாம்இதுவும் துர்ருல் முக்தார் என்ற நூலில் தான் கூறப்பட்டுள்ளது.
நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதல்படி தீர்ப்பு வழங்குவார்கள்என்றிருக்க இமாம் அபூஹனீபாவையேஈஸா அலை பின்பற்றுவார்கள் என்றால் இதை யாராவது நம்ப முடியுமா?
மற்றி இமாம்களை இப்லீஸை விடக் கெட்டவர்கள் என்று சித்தரிக்கக் கூடியவர்கள் தான் இமாம்களைமதிக்கின்றார்களா?

POSTED BY S.SHAHIDU OLI

No comments

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .