Breaking News

ஸுனன் திர்மிதி அத்தியாயம் 02 தொழுகை

திர்மிதி - ஹதீஸ் எண்: 149


حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِىِّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِى الزِّنَادِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ عَيَّاشِ بْنِ أَبِى رَبِيعَةَ عَنْ حَكِيمِ بْنِ حَكِيمٍ وَهُوَ ابْنُ عَبَّادِ بْنِ حُنَيْفٍ أَخْبَرَنِى نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ أَخْبَرَنِى ابْنُ عَبَّاسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « أَمَّنِى جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ عِنْدَ الْبَيْتِ مَرَّتَيْنِ فَصَلَّى الظُّهْرَ فِى الأُولَى مِنْهُمَا حِينَ كَانَ الْفَىْءُ مِثْلَ الشِّرَاكِ ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ كُلُّ شَىْءٍ مِثْلَ ظِلِّهِ ثُمَّ صَلَّى الْمَغْرِبَ حِينَ وَجَبَتِ الشَّمْسُ وَأَفْطَرَ الصَّائِمُ ثُمَّ صَلَّى الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ ثُمَّ صَلَّى الْفَجْرَ حِينَ بَرَقَ الْفَجْرُ وَحَرُمَ الطَّعَامُ عَلَى الصَّائِمِ. وَصَلَّى الْمَرَّةَ الثَّانِيَةَ الظُّهْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَىْءٍ مِثْلَهُ لِوَقْتِ الْعَصْرِ بِالأَمْسِ ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَىْءٍ مِثْلَيْهِ ثُمَّ صَلَّى الْمَغْرِبَ لِوَقْتِهِ الأَوَّلِ ثُمَّ صَلَّى الْعِشَاءَ الآخِرَةَ حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ ثُمَّ صَلَّى الصُّبْحَ حِينَ أَسْفَرَتِ الأَرْضُ ثُمَّ الْتَفَتَ إِلَىَّ جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ هَذَا وَقْتُ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِكَ. وَالْوَقْتُ فِيمَا بَيْنَ هَذَيْنِ الْوَقْتَيْنِ ». قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ أَبِى هُرَيْرَةَ وَبُرَيْدَةَ وَأَبِى مُوسَى وَأَبِى مَسْعُودٍ الأَنْصَارِىِّ وَأَبِى سَعِيدٍ وَجَابِرٍ وَعَمْرِو بْنِ حَزْمٍ وَالْبَرَاءِ وَأَنَسٍ.

(ஒவ்வொரு தொழுகையையும் அதன் ஆரம்ப நேரம் அதன் கடைசி நேரம் ஆகிய இரு நேரங்களில்)இரண்டு தடவை எனக்கு ஜிப்ரீல் (அலை) கஃபாவில் இமாமத் செய்தார்கள் .முதல் தடவை இமாமத் செய்யும் போது செருப்பின் வார் அளவு நிழல் (உச்சியிலிருந்து) சாய்ந்த பொது லுகரையும்,ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு நீண்ட போது அசரையும் ,சூரியன் மறந்து நோன்பு வைத்திருப்பவர் நோன்பு திறக்கும் போது மஃகரிபையும், அடிவானத்தின் செம்மை மறையும் போது இஷாவையும் ,அடிவானத்தில் வெண்மை தோன்றி நோன்பாளிக்கு உணவு ஹரமாகும் போது பஜ்ரையும் தொழ வைத்தார்கள் . இரண்டாம் முறை தொழவைக்கும் போது ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வரும் நேரத்தில் அதாவது முதலாவது நாள் அசார் தொழுத நேரத்தில் லுஹரையும் ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளைப் போல் இருமடங்காக ஆகும் நேரத்தில் அசரையும்,மஃகரிபை அதன் ஆரம்ப நேரத்திலும் ,இரவில் மூன்றிலொரு பகுதி கழிந்த போது இஷாவையும் ,நீளம் வெளிச்சம் அடையும்போது சுபுஹையும் தொழ வைத்தார்கள் பின்பு ஜிப்ரீல் (அலை) என்னை நோக்கி திரும்பி “முஹம்மதே! இவ்விரண்டு நேரங்களுக்கும் இடையில் உள்ள நேரங்களே தொழுகைகளின் நேரங்களாகும் .இதுவே உமக்கு முன்னருள்ள நபிமார்களின் நேரமாகும்!” என்று ஜிப்ரீல் கூறியதாக நபி(ஸல்) கூறினார்கள் .இதை இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள் இக்கருத்து அபூஹுரைரா (ரலி) ,புரைதா(ரலி),அபூ மூஸா (ரலி),அபூ மஸ்வூத் அல் அன்சாரி (ரலி),அபூசயீத் (ரலி),ஜாபிர் (ரலி),அம்ர் இப்னு ஹஸ்ம் (ரலி)பரா (ரலி), அனஸ்(ரலி) வழியாகவும் அறிவிக்கபட்டுள்ளது என்று அபூ ஈசா கூறுகிறேன் (குறிப்பு : அஹ்மத்,அபூதாவூத்,இப்னு குஸைமா,தாரகுத்னி,ஹாகிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது ) ஹதீஸ் எண்:150 முந்தைய ஹடீசையே ஜாபிர் (ரலி) அறிவிப்பதாக இங்கே இடம் பெற்றுள்ளது .எனினும் முதல் நாள் அசார் தொழுத நேரத்தில் என்ற வாசகம் மட்டும் இங்கே இல்லை . இது ஹஸன் கரீப் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் (149) ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூ ஈசா கூறுகிறேன் தொழுகை நேரம் பற்றிய ஹதீஸ்களில் ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் மிகவும் ஆதாரபூர்வமானது என்று முஹமத் (என்ற புகாரி இமாம் குறிப்பிட்டுள்ளார்கள்.

திர்மிதி - ஹதீஸ் எண்: 150


- حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِىِّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِى الزِّنَادِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ عَيَّاشِ بْنِ أَبِى رَبِيعَةَ عَنْ حَكِيمِ بْنِ حَكِيمٍ وَهُوَ ابْنُ عَبَّادِ بْنِ حُنَيْفٍ أَخْبَرَنِى نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ أَخْبَرَنِى ابْنُ عَبَّاسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « أَمَّنِى جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ عِنْدَ الْبَيْتِ مَرَّتَيْنِ فَصَلَّى الظُّهْرَ فِى الأُولَى مِنْهُمَا حِينَ كَانَ الْفَىْءُ مِثْلَ الشِّرَاكِ ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ كُلُّ شَىْءٍ مِثْلَ ظِلِّهِ ثُمَّ صَلَّى الْمَغْرِبَ حِينَ وَجَبَتِ الشَّمْسُ وَأَفْطَرَ الصَّائِمُ ثُمَّ صَلَّى الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ ثُمَّ صَلَّى الْفَجْرَ حِينَ بَرَقَ الْفَجْرُ وَحَرُمَ الطَّعَامُ عَلَى الصَّائِمِ. وَصَلَّى الْمَرَّةَ الثَّانِيَةَ الظُّهْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَىْءٍ مِثْلَهُ لِوَقْتِ الْعَصْرِ بِالأَمْسِ ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَىْءٍ مِثْلَيْهِ ثُمَّ صَلَّى الْمَغْرِبَ لِوَقْتِهِ الأَوَّلِ ثُمَّ صَلَّى الْعِشَاءَ الآخِرَةَ حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ ثُمَّ صَلَّى الصُّبْحَ حِينَ أَسْفَرَتِ الأَرْضُ ثُمَّ الْتَفَتَ إِلَىَّ جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ هَذَا وَقْتُ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِكَ. وَالْوَقْتُ فِيمَا بَيْنَ هَذَيْنِ الْوَقْتَيْنِ ». قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ أَبِى هُرَيْرَةَ وَبُرَيْدَةَ وَأَبِى مُوسَى وَأَبِى مَسْعُودٍ الأَنْصَارِىِّ وَأَبِى سَعِيدٍ وَجَابِرٍ وَعَمْرِو بْنِ حَزْمٍ وَالْبَرَاءِ وَأَنَسٍ.

(ஒவ்வொரு தொழுகையையும் அதன் ஆரம்ப நேரம் அதன் கடைசி நேரம் ஆகிய இரு நேரங்களில்)இரண்டு தடவை எனக்கு ஜிப்ரீல் (அலை) கஃபாவில் இமாமத் செய்தார்கள் .முதல் தடவை இமாமத் செய்யும் போது செருப்பின் வார் அளவு நிழல் (உச்சியிலிருந்து) சாய்ந்த பொது லுகரையும்,ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு நீண்ட போது அசரையும் ,சூரியன் மறந்து நோன்பு வைத்திருப்பவர் நோன்பு திறக்கும் போது மஃகரிபையும், அடிவானத்தின் செம்மை மறையும் போது இஷாவையும் ,அடிவானத்தில் வெண்மை தோன்றி நோன்பாளிக்கு உணவு ஹரமாகும் போது பஜ்ரையும் தொழ வைத்தார்கள் . இரண்டாம் முறை தொழவைக்கும் போது ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வரும் நேரத்தில் அதாவது முதலாவது நாள் அசார் தொழுத நேரத்தில் லுஹரையும் ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளைப் போல் இருமடங்காக ஆகும் நேரத்தில் அசரையும்,மஃகரிபை அதன் ஆரம்ப நேரத்திலும் ,இரவில் மூன்றிலொரு பகுதி கழிந்த போது இஷாவையும் ,நீளம் வெளிச்சம் அடையும்போது சுபுஹையும் தொழ வைத்தார்கள் பின்பு ஜிப்ரீல் (அலை) என்னை நோக்கி திரும்பி “முஹம்மதே! இவ்விரண்டு நேரங்களுக்கும் இடையில் உள்ள நேரங்களே தொழுகைகளின் நேரங்களாகும் .இதுவே உமக்கு முன்னருள்ள நபிமார்களின் நேரமாகும்!” என்று ஜிப்ரீல் கூறியதாக நபி(ஸல்) கூறினார்கள் .இதை இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள் இக்கருத்து அபூஹுரைரா (ரலி) ,புரைதா(ரலி),அபூ மூஸா (ரலி),அபூ மஸ்வூத் அல் அன்சாரி (ரலி),அபூசயீத் (ரலி),ஜாபிர் (ரலி),அம்ர் இப்னு ஹஸ்ம் (ரலி)பரா (ரலி), அனஸ்(ரலி) வழியாகவும் அறிவிக்கபட்டுள்ளது என்று அபூ ஈசா கூறுகிறேன் (குறிப்பு : அஹ்மத்,அபூதாவூத்,இப்னு குஸைமா,தாரகுத்னி,ஹாகிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது ) ஹதீஸ் எண்:150 முந்தைய ஹடீசையே ஜாபிர் (ரலி) அறிவிப்பதாக இங்கே இடம் பெற்றுள்ளது .எனினும் முதல் நாள் அசார் தொழுத நேரத்தில் என்ற வாசகம் மட்டும் இங்கே இல்லை . இது ஹஸன் கரீப் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் (149) ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூ ஈசா கூறுகிறேன் தொழுகை நேரம் பற்றிய ஹதீஸ்களில் ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் மிகவும் ஆதாரபூர்வமானது என்று முஹமத் (என்ற புகாரி இமாம் குறிப்பிட்டுள்ளார்கள்.

திர்மிதி - ஹதீஸ் எண்: 151


حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى صَالِحٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ لِلصَّلاَةِ أَوَّلاً وَآخِرًا وَإِنَّ أَوَّلَ وَقْتِ صَلاَةِ الظُّهْرِ حِينَ تَزُولُ الشَّمْسُ وَآخِرَ وَقْتِهَا حِينَ يَدْخُلُ وَقْتُ الْعَصْرِ وَإِنَّ أَوَّلَ وَقْتِ صَلاَةِ الْعَصْرِ حِينَ يَدْخُلُ وَقْتُهَا وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ تَصْفَرُّ الشَّمْسُ وَإِنَّ أَوَّلَ وَقْتِ الْمَغْرِبِ حِينَ تَغْرُبُ الشَّمْسُ وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ يَغِيبُ الأُفُقُ وَإِنَّ أَوَّلَ وَقْتِ الْعِشَاءِ الآخِرَةِ حِينَ يَغِيبُ الأُفُقُ وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ يَنْتَصِفُ اللَّيْلُ وَإِنَّ أَوَّلَ وَقْتِ الْفَجْرِ حِينَ يَطْلُعُ الْفَجْرُ وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو. قَالَ أَبُو عِيسَى وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ حَدِيثُ الأَعْمَشِ عَنْ مُجَاهِدٍ فِى الْمَوَاقِيتِ أَصَحُّ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ فُضَيْلٍ عَنِ الأَعْمَشِ وَحَدِيثُ مُحَمَّدِ بْنِ فُضَيْلٍ خَطَأٌ أَخْطَأَ فِيهِ مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ. حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ أَبِى إِسْحَاقَ الْفَزَارِىِّ عَنِ الأَعْمَشِ عَنْ مُجَاهِدٍ قَالَ كَانَ يُقَالُ إِنَّ لِلصَّلاَةِ أَوَّلاً وَآخِرًا فَذَكَرَ نَحْوَ حَدِيثِ مُحَمَّدِ بْنِ فُضَيْلٍ عَنِ الأَعْمَشِ نَحْوَهُ بِمَعْنَاهُ.

நிச்சயமாக தொழுகைகளுக்கு ஆரம்ப நேரமும்கடைசி நேரமும் உண்டு லுஹர் தொழுகையின் ஆரம்ப நேரம் சூரியன் உச்சியிலிருந்து சாயும் நேரமாகும் .அதன் கடைசி நேரம் அஸர் நேரம் ஆரம்பமாகும் நேரமாகும். அஸர் தொழுகையின் ஆரம்ப நேரம் அஸர் நேரம் ஏற்படும் நேரமாகும் . அதன் கடைசி நேரம் சூரியன் மஞ்சள் நிரமடையும் நேரமாகும் .மஃகரிப் தொழுகையின் ஆரம்ப நேரம் சூரியன் மறையும் நேரமாகும் .அதன் இறுதி நேரம் அடிவான(த்தின் செம்மை) மறையும் நேரமாகும் . இஷாவின் ஆரம்ப நேரம் அடிவான(த்தின் செம்மை) மறையும் நேரமாகும். அதன் கடைசி நேரம் இரவு பாதியாகும் நேரமாகும் பஜ்ரின் ஆரம்ப நேரம் அடிவானத்தின் வெண்மை தோன்றும் நேரமாகு என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் இக்கருத்து அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாகவும் அறிவிக்கபட்டுள்ளது மேற்கூறிய ஹதீஸில் இடம் பெரும் முஹம்மத் இப்னு புலைல் என்பவர் தவறுதலாக கூறிவிடக்கூடியவர் என்று முஹம்மத் (என்ற புகாரி இமாம் )கூற நான் செவியுற்றுள்ளேன் .இதே ஹதீஸை முஹம்மத் இப்னு புலைல் என்பவரும் அறிவித்துள்ளார் என்று அபூ ஈசா கூறுகிறேன் (குறிப்பு :முஅத்தவிலும், நாசயிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது )

திர்மிதி - ஹதீஸ் எண்: 152


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ وَالْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ وَأَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى الْمَعْنَى وَاحِدٌ قَالُوا حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ عَنْ سُفْيَانَ الثَّوْرِىِّ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ أَتَى النَّبِىَّ -صلى الله عليه وسلم- رَجُلٌ فَسَأَلَهُ عَنْ مَوَاقِيتِ الصَّلاَةِ فَقَالَ « أَقِمْ مَعَنَا إِنْ شَاءَ اللَّهُ ». فَأَمَرَ بِلاَلاً فَأَقَامَ حِينَ طَلَعَ الْفَجْرُ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ حِينَ زَالَتِ الشَّمْسُ فَصَلَّى الظُّهْرَ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ فَصَلَّى الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُرْتَفِعَةٌ ثُمَّ أَمَرَهُ بِالْمَغْرِبِ حِينَ وَقَعَ حَاجِبُ الشَّمْسِ ثُمَّ أَمَرَهُ بِالْعِشَاءِ فَأَقَامَ حِينَ غَابَ الشَّفَقُ ثُمَّ أَمَرَهُ مِنَ الْغَدِ فَنَوَّرَ بِالْفَجْرِ ثُمَّ أَمَرَهُ بِالظُّهْرِ فَأَبْرَدَ وَأَنْعَمَ أَنْ يُبْرِدَ ثُمَّ أَمَرَهُ بِالْعَصْرِ فَأَقَامَ وَالشَّمْسُ آخِرَ وَقْتِهَا فَوْقَ مَا كَانَتْ ثُمَّ أَمَرَهُ فَأَخَّرَ الْمَغْرِبَ إِلَى قُبَيْلِ أَنْ يَغِيبَ الشَّفَقُ ثُمَّ أَمَرَهُ بِالْعِشَاءِ فَأَقَامَ حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ ثُمَّ قَالَ « أَيْنَ السَّائِلُ عَنْ مَوَاقِيتِ الصَّلاَةِ ». فَقَالَ الرَّجُلُ أَنَا. فَقَالَ « مَوَاقِيتُ الصَّلاَةِ كَمَا بَيْنَ هَذَيْنِ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ. قَالَ وَقَدْ رَوَاهُ شُعْبَةُ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ أَيْضًا.

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகையின் நேரம் பற்றி கேட்டார் . அதற்கு நபி(ஸல்) அவர்கள் நம்முடன் இரு நாட்கள் (இன்ஷா அல்லாஹ்) தங்குவீராக என்றார்கள். பிலால் (ரலி) அவர்களிடம் (பாங்கு கூறுமாறு) கட்டளையிடு வானில் வெண்மை உதிக்கும் போது (பஜ்ரு) தொழ வைத்தார்கள் .பிறகு சூரியன் உச்சியிலிருந்து சாயும் போது (லூகாருக்கு பங்கு சொல்ல )பிளாளுக்கு கட்டளையிடு லூகாரை தொழுதார்கள். சூரியன் உயரத்தில் வெண்மையாக (பிரகாசிக்கும்) போது (அஸர் தொழுகைக்கு பாங்கு கூற) கட்டளையிட்டு அசறை தொழுதார்கள் .சூரியன் மறையும் போது (மஃகிரிபுக்கு பாங்கு சொல்லுமாறு) அவருக்கு கட்டளையிட்டார்கள் .அடிவானத்தின் செம்மை மறைந்த பொது இஷாவுக்கு (பங்கு சொல்லுமாறு) அவருக்கு கட்டளையிட்டார்கள் பின்பு மறுநாள் பஜ்ர் தொழுகைக்காக நான்கு வெளிச்சம் ஏற்ப்பட்டபோது (பாங்கு சொல்ல) பிலாலுக்கு கட்டளையிடு பிஜ்ரை தொழுதார்கள் .சூர்யா வெப்பம் தனியும் நேரம் வரை லுகரைத் தாமதமாக்கி (பங்கு சொல்லுமாறு) அவருக்கு கட்டளையிட்டான. இவ்வாறு இரு நாட்கள் தொழுது கட்டிவிட்டு ‘தொழுகையின் நேரங்களை பற்றி கேட்டவர் எங்கே? என்று நபி(ஸல்) கேட்டார்கள் .”இதோ இருக்கிறேன்” என்றார் அவர் .(இவ்விரண்டு நாட்களில்) தொழுது காட்டிய இரு நேரங்களுக்கிடைபட்ட நேரங்களே தொழுகைகளின் நேரங்களாகும் என்று நபி(ஸல்) கூறியதாக புரைதா(ரலி) அறிவிக்கிறார்கள். இது ஹஸன் கரீப் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூ ஈசா கூறுகிறேன் (குறிப்பு : முஸ்லிம்,நஸயீலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது )

திர்மிதி - ஹதீஸ் எண்: 153


حَدَّثَنَا قُتَيْبَةُ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ قَالَ وَحَدَّثَنَا الأَنْصَارِىُّ حَدَّثَنَا مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لَيُصَلِّى الصُّبْحَ فَيَنْصَرِفُ النِّسَاءُ قَالَ الأَنْصَارِىُّ فَيَمُرُّ النِّسَاءُ مُتَلَفِّفَاتٍ بِمُرُوطِهِنَّ مَا يُعْرَفْنَ مِنَ الْغَلَسِ. وَقَالَ قُتَيْبَةُ مُتَلَفِّعَاتٍ. قَالَ وَفِى الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَنَسٍ وَقَيْلَةَ بِنْتِ مَخْرَمَةَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَدْ رَوَاهُ الزُّهْرِىُّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ نَحْوَهُ. وَهُوَ الَّذِى اخْتَارَهُ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مِنْهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ وَبِهِ يَقُولُ الشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ يَسْتَحِبُّونَ التَّغْلِيسَ بِصَلاَةِ الْفَجْرِ.

நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையை தொழ வைப்பார்கள் (அவர்களுடன் தொழுத) பெண்கள் தங்களின் போர்வைகளால் போர்த்திக்கொண்டு (வீடு) திரும்புவார்.(அவ்வாறு திரும்பும் போது) இருட்டின் காரணமாக அவர்களை அடையாளம் காணமுடியாது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் இக்கருத்து இப்னு உமர் (ரலி),அனஸ்(ரலி), அனஸ் (ரலி), கைள பிந்த் மாக்ரமா(ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது . ஆயிஷா (ரலி) வழியாக அறிவிக்கப்படும் மேற்கண்ட ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் அபூபக்ரு(ரலி),உமர்(ரலி) உட்பட அநேக நபித்தோழர்கள், அவர்களுக்குப் பின்வந்த பெரும்பாலான தாபியீங்களின் கருத்தும் இதுவேயாகும் . ஷாஃபி ,அஹமத்,இஸ்ஹாக் ஆகி யாரும் இவ்வாறே வெளிச்சம் பரவுமுன் தொழ வேண்டும் என்கின்றனர் ; என்று அபூ ஈசா கூறுகிறேன் (குறிப்பு : புகாரி ,முஸ்லிம் ,முஅத்தா,நஸயீ ,அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது )

திர்மிதி - ஹதீஸ் எண்: 154


حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ - هُوَ ابْنُ سُلَيْمَانَ - عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « أَسْفِرُوا بِالْفَجْرِ فَإِنَّهُ أَعْظَمُ لِلأَجْرِ ». قَالَ وَقَدْ رَوَى شُعْبَةُ وَالثَّوْرِىُّ هَذَا الْحَدِيثَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ. قَالَ وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ عَجْلاَنَ أَيْضًا عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ. قَالَ وَفِى الْبَابِ عَنْ أَبِى بَرْزَةَ الأَسْلَمِىِّ وَجَابِرٍ وَبِلاَلٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ رَافِعِ بْنِ خَدِيجٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَدْ رَأَى غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ الإِسْفَارَ بِصَلاَةِ الْفَجْرِ. وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِىُّ. وَقَالَ الشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ مَعْنَى الإِسْفَارِ أَنْ يَضِحَ الْفَجْرُ فَلاَ يُشَكَّ فِيهِ وَلَمْ يَرَوْا أَنَّ مَعْنَى الإِسْفَارِ تَأْخِيرُ الصَّلاَةِ.

“பஜ்ரை வெளிச்சம் ஏற்பட்டதும் தொழுங்கள்! ஏனெனில் நிச்சயமாக அது மகத்தான கூலிக்குரியதாகும்” என்று நபி(ஸல்)கூறியதாக ராபிவு இப்னு கதீஜ் (ரலி) அறிவிக்கிறார்கள். இக்கருத்து அபூபர்ஸா அல்அஸ்லமி (ரலி),ஜாபிர் (ரலி),பிலால்(ரலி) வழியாகவும் அறிவிக்கபட்டுள்ளது ராபிவு இப்னு கதீஜ்(ரலி) அறிவிக்கும் மேற்கூறிய ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் நபித்தோழர்கள் தாபியீங்களில் அநேகர் பஜ்ரை வெளிச்சம் வந்த பின் தொழ வேண்டும் என்கிறார்கள். ஸூஃப்யான் சவ்றியும் இதையே கூறுகிறார்கள் . “சந்தேகத்திர்க்கு இடமின்றி பஜ்ரு வந்துவிட்டது என்று தெளிவாகுதல்” என்பதே வெளிச்சத்தில் என்பதின் கருத்தாகும் . பஜ்ரை தாமதப்படுத்துவது என்பது இதன் பொருளல்ல என்று ஷஃபி ,அஹமத்,இஸ்ஹாக் ஆகியோர் குருப்பிடுகின்றனர் என்று அபூ ஈசா கூறுகிறேன் (குறிப்பு : அபூதாவூத்,நஸயீ,இப்னு மாஜா,இப்னு ஹிப்பான்,தப்ரானி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது )

திர்மிதி - ஹதீஸ் எண்: 155


حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِىِّ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الأَسْوَدِ عَنْ عَائِشَةَ قَالَتْ مَا رَأَيْتُ أَحَدًا كَانَ أَشَدَّ تَعْجِيلاً لِلظُّهْرِ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَلاَ مِنْ أَبِى بَكْرٍ وَلاَ مِنْ عُمَرَ. قَالَ وَفِى الْبَابِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَخَبَّابٍ وَأَبِى بَرْزَةَ وَابْنِ مَسْعُودٍ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَأَنَسٍ وَجَابِرِ بْنِ سَمُرَةَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ. وَهُوَ الَّذِى اخْتَارَهُ أَهْلُ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَمَنْ بَعْدَهُمْ. قَالَ عَلِىُّ بْنُ الْمَدِينِىِّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ وَقَدْ تَكَلَّمَ شُعْبَةُ فِى حَكِيمِ بْنِ جُبَيْرٍ مِنْ أَجْلِ حَدِيثِهِ الَّذِى رَوَى عَنِ ابْنِ مَسْعُودٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- « مَنْ سَأَلَ النَّاسَ وَلَهُ مَا يُغْنِيهِ ». قَالَ يَحْيَى وَرَوَى لَهُ سُفْيَانُ وَزَائِدَةُ وَلَمْ يَرَ يَحْيَى بِحَدِيثِهِ بَأْسًا. قَالَ مُحَمَّدٌ وَقَدْ رُوِىَ عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى تَعْجِيلِ الظُّهْرِ.

நபி(ஸல்) அவர்களைவிட வேறு எவரும் லூகாரை மிகவும் முன்னேறத்தில் தொழுபவர்களாக நான் கண்டதில்லை” என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள் இக்கருத்து ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரலி),கப்பாப் (ரலி),அபூ பர்ஸா(ரலி),இப்னு மஸ்வூத் (ரலி),ஸைத் இப்னு ஸாபித் (ரலி), ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி)ஆகியோர் வழியாகவும் அறிவிக்கபட்டுள்ளது ஆயிஷா(ரலி) அறிவிக்கும் மேற்கூறிய ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூ ஈசா கூறுகிறேன் நபித்தோழர்கள் மற்றும் அவ்ராகளுக்கு பின் வந்தவர்களில் அறிஞர்கள் இடையே தேர்ந்தெடுத்து உள்ளனர். ஷுஃபா அவர்கள் இந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளராகிய ஹகீம் இப்னு ஜுபைர் என்பவரை அவர் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸின் காரணமாக குறைகூறியுள்ளனர் .அந்த மற்றொரு ஹதீஸ் வருமாறு : தனக்கு போதுமான அளவு இருக்கும் போது யார் மக்களிடம் யாசிக்கிறாரோ அவர் மறுமையில் வரும் போது அவரது யாசகம் அவரது முகத்தில் விகாரமாகத் தென்படும் நிலையில் வருவார் என்று நபி(ஸல்) கூறிய போது “அல்லாஹ்வின் தூதரே! ஒருவனுக்கு போதுமான அளவு என்பது எவ்வளவு ? என்று கேட்கப்பட்டது . “ஐம்பது திர்கங்கள் ,அல்லது அதற்க்கு நிகரான தங்கம்” என்று நபி(ஸல்)கூறினார்கள் இப்னு மஸ்வூத்(ரலி) வாயிலாக ஹக்கீம் இப்னு ஜுபைர் இதை அறிவித்துள்ளார்கள். (திர்மிதி,அபூதாவூத்,நஸயீ,இப்னு மஜா ,தாரமி ) ஆனாலும் ஷுபா அவர்கள் அவரை விமர்சனம் செய்ததை மற்றவர்கள் ஏற்கவில்லை. “ஸூபியான் ,ஸாயிதா ஆகியோர் வழியாக அறிவித்துள்ளார். என்று எஹ்யா அவர்கள் கூறியதுடன் அவரை பற்றி குறையுடையவராக யஹ்யா அவர்கள் கருதவில்லை என்று அபு ஈஷா கூறுகிறேன்

திர்மிதி - ஹதீஸ் எண்: 156


حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِىٍّ الْحُلْوَانِىُّ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِىِّ قَالَ أَخْبَرَنِى أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- صَلَّى الظُّهْرَ حِينَ زَالَتِ الشَّمْسُ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ. وَهُوَ أَحْسَنُ حَدِيثٍ فِى هَذَا الْبَابِ. وَفِى الْبَابِ عَنْ جَابِرٍ.

‘சூரியன் சாயும் நேரத்தில் நபி(ஸல்) அவ்ரகள் லுஹர் தொழுதார்கள் என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் . இது ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் ஜாபிர்(ரலி) வழியாகவும் இக்கருத்து அறிவிக்கபட்டுள்ளது இக்கருத்தில் வந்துள்ள ஹதீஸ்களில்,அனஸ் (ரலி)அறிவிக்கும் ஹதீஸ் மிக அழகியதாகும்” என்று அபூ ஈசா கூறுகிறேன் (குறிப்பு : நஸயீயிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது )

திர்மிதி - ஹதீஸ் எண்: 157


حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ وَأَبِى سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ أَبِى سَعِيدٍ وَأَبِى ذَرٍّ وَابْنِ عُمَرَ وَالْمُغِيرَةِ وَالْقَاسِمِ بْنِ صَفْوَانَ عَنْ أَبِيهِ وَأَبِى مُوسَى وَابْنِ عَبَّاسٍ وَأَنَسٍ. قَالَ وَرُوِىَ عَنْ عُمَرَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى هَذَا وَلاَ يَصِحُّ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِى هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَدِ اخْتَارَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ تَأْخِيرَ صَلاَةِ الظُّهْرِ فِى شِدَّةِ الْحَرِّ وَهُوَ قَوْلُ ابْنِ الْمُبَارَكِ وَأَحْمَدَ وَإِسْحَاقَ. قَالَ الشَّافِعِىُّ إِنَّمَا الإِبْرَادُ بِصَلاَةِ الظُّهْرِ إِذَا كَانَ مَسْجِدًا يَنْتَابُ أَهْلُهُ مِنَ الْبُعْدِ فَأَمَّا الْمُصَلِّى وَحْدَهُ وَالَّذِى يُصَلِّى فِى مَسْجِدِ قَوْمِهِ فَالَّذِى أُحِبُّ لَهُ أَنْ لاَ يُؤَخِّرَ الصَّلاَةَ فِى شِدَّةِ الْحَرِّ. قَالَ أَبُو عِيسَى وَمَعْنَى مَنْ ذَهَبَ إِلَى تَأْخِيرِ الظُّهْرِ فِى شِدَّةِ الْحَرِّ هُوَ أَوْلَى وَأَشْبَهُ بِالاِتِّبَاعِ وَأَمَّا مَا ذَهَبَ إِلَيْهِ الشَّافِعِىُّ أَنَّ الرُّخْصَةَ لِمَنْ يَنْتَابُ مِنَ الْبُعْدِ وَالْمَشَقَّةِ عَلَى النَّاسِ فَإِنَّ فِى حَدِيثِ أَبِى ذَرٍّ مَا يَدُلُّ عَلَى خِلاَفِ مَا قَالَ الشَّافِعِىُّ. قَالَ أَبُو ذَرٍّ كُنَّا مَعَ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى سَفَرٍ فَأَذَّنَ بِلاَلٌ بِصَلاَةِ الظُّهْرِ فَقَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- « يَا بِلاَلُ أَبْرِدْ ثُمَّ أَبْرِدْ ». فَلَوْ كَانَ الأَمْرُ عَلَى مَا ذَهَبَ إِلَيْهِ الشَّافِعِىُّ لَمْ يَكُنْ لِلإِبْرَادِ فِى ذَلِكَ الْوَقْتِ مَعْنًى لاِجْتِمَاعِهِمْ فِى السَّفَرِ وَكَانُوا لاَ يَحْتَاجُونَ أَنْ يَنْتَابُوا مِنَ الْبُعْدِ.

கோடை கடுமையாகும் போது,லுஹரைத் தாமதப்படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக்காற்றால் என்று நபி(ஸல்)கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் அபூஸயித்(ரலி),அபூதர்(ரலி), இப்னு உமர்(ரலி),முகிரா (ரலி),ஸஃப்வான்(ரலி),அபூமூஸா (ரலி),இப்னு அப்பாஸ்(ரலி),அனஸ்(ரலி) ஆகியோர் வழியாகவும் இக்கருத்து அறிவிக்கபட்டுள்ளது அது ஆதர்வப்பூர்வமானது அல்ல. அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் அறிஞர்களில் ஒரு பிரிவினர் கடுமையான கோடையில் லுஹர் தொழுகையை பிர்ப்படுத்துவதை தேர்வு செய்கின்றனர்.இப்னுல் முபாரக் ,அஹமத் ,இஸ்ஹாக் ஆகியோரும் இக்கருத்துடையவர்கள் லுஹரைப் பிர்ப்படுத்துவது என்பது பொதுவானதல்ல.ஒரு பள்ளி தூரமாக இருந்து,அப்பள்ளிக்கு வழக்கமாக வருவோர் (முன்னேறத்தி வருவதற்க்கு) சிரமப்பட்டால் தான் லூகாரை பிர்ப்படுத்தலாம்.தனித்து தொழுபவரும், தனக்கு அருகில் உள்ள பள்ளியில் தொழுபவரும் கோடையில் லுஹராய் பிற்படுத்தக்கூடாது என்றே நான் விரும்புகிறேன் : என ஷாஃபி அவர்கள் குருப்பிடுகிறார்கள். கடுமையான கோடையில் லுஹராய் பிற்படுத்த வேண்டும் என பொதுவாக கூறுபவர்களின் கருத்தே நபி வழியை பின்பற்றுவதாகும்: (ஷஃபி இமாமுடைய விளக்கம் சரியில்லை ) என்று அபூ ஈசா கூறுகிறேன் . பள்ளி தூரமாக இருப்பதானாலும் மக்களுக்கு சிரமமாக இருப்பதானாலும் தான் லூகாரை பிற்படுத்தலாம் என்று ஷாஃபி அவர்களிலின் கருத்தை பின்வரும் அபுதர் (ரலி)அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் நிராகரித்து விடுகின்றது . நாங்கள் நபி(ஸல்) அவ்ராகளுடன் ஒரு பயணத்தில் இருந்தோம் . அப்போது பிலால் (ரலி) லூகாருக்கு பங்கு சொல்லலானார்கள் . அப்போது நபி(ஸல்) அவர்கள் பிலாலே! தாமதப்படுத்துவீராக ! பிலாலே! தாமதப்படுத்துவீராக என்று கூறுவீராக அபூதர்(ரலி) அறிவித்துள்ளனர். இந்த ஹதீஸின் அனைவரில் ஓரிடத்தில் குழுமி இருந்துள்ளனர் .துரத்திர்க்கு செல்ல வேண்டிய சிரமம் ஏதும் இங்கே இருக்கவில்லை. அப்படி இருந்தும் நபி(ஸல்) அவர்கள் லுஹரை தாமதப்படுத்த சொல்லியுள்ளதால் ஷாஃபி இமாம் அவர்களின் கூறுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று அபூ ஈசா கூறுகிறேன் (குறிப்பு : புகாரி ,முஸ்லிம் ,முஅத்தா, அபூதாவூத் ,நஸயீ, ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது .திர்மிதி இமாம் ஷாஃபி மதூகபூக்காக என்று போயி சொல்லி திரிவோருக்கும் திர்மிதி அவர்களின் இந்த விமர்சனம் சரியான பதிலாக அமைந்துள்ளதை கவனிக்க )

திர்மிதி - ஹதீஸ் எண்: 158 حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِىُّ قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ عَنْ مُهَاجِرٍ أَبِى الْحَسَنِ عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ عَنْ أَبِى ذَرٍّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ فِى سَفَرٍ وَمَعَهُ بِلاَلٌ فَأَرَادَ بِلاَلٌ أَنْ يُقِيمَ فَقَالَ « أَبْرِدْ ». ثُمَّ أَرَادَ أَنْ يُقِيمَ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَبْرِدْ فِى الظُّهْرِ ». قَالَ حَتَّى رَأَيْنَا فَىْءَ التُّلُولِ ثُمَّ أَقَامَ فَصَلَّى فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்தனர்.அவர்களுடன் பிலால்(ரலி)அவர்களும் இருந்தனர் .அவர் இக்காமத் சொல்ல நாடிய போது தாமதப்படுத்துவீராக !என்று கூறினார்கள் மணல் திட்டுகளில் நிழல் தென்படும் வரை பின்ப்படுத்தினார்கள் .பின்னர் இக்காமத் சொல்லி தொழுதார்கள் கடுமையான வெப்பம் நரகத்தின் பேரு மூச்சாம் .எனவே தொழுகையை தாமதப்படுத்துங்கள் என்று நபி(ஸல்)கூறியதாக அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள். இது ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸ் என்று அபூ ஈசா கூறுகிறேன் (குறிப்பு : புகாரி ,முஸ்லிம் , அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது ) திர்மிதி - ஹதீஸ் எண்: 159 حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ صَلَّى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- الْعَصْرَ وَالشَّمْسُ فِى حُجْرَتِهَا لَمْ يَظْهَرِ الْفَىْءُ مِنْ حُجْرَتِهَا. قَالَ وَفِى الْبَابِ عَنْ أَنَسٍ وَأَبِى أَرْوَى وَجَابِرٍ وَرَافِعِ بْنِ خَدِيجٍ. قَالَ وَيُرْوَى عَنْ رَافِعٍ أَيْضًا عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى تَأْخِيرِ الْعَصْرِ وَلاَ يَصِحُّ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ الَّذِى اخْتَارَهُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مِنْهُمْ عُمَرُ وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ وَعَائِشَةُ وَأَنَسٌ وَغَيْرُ وَاحِدٍ مِنَ التَّابِعِينَ تَعْجِيلُ صَلاَةِ الْعَصْرِ وَكَرِهُوا تَأْخِيرَهَا. وَبِهِ يَقُولُ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ. சூரிய ஒளி எனது அறையில் விலுந்து கொண்டிருக்கும் நேரத்தில் எனது அறையில் நிழல் உயராதா நேரத்தி நபி(ஸல்) அவர்கல் அஸர் தொழுதார்கள் என ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள். அனஸ்(ரலி) ,அபூஅர்வா (ரலி) ,ஜாபிர் (ரலி) ராபிவு இப்னு கதீஜ் (ரலி) ஆகியோர் வழியாகவும் இக்கருத்து அறிவிக்கப்படுகிறது.நபி(ஸல்) அஸரை தாமதப்படுத்தியதாகவும் ராபிவு(ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூ ஈசா கூறுகிறேன் அனஸ்(ரலி),அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) உட்பட நபித்தோழர்களில் சில அறிஞர்களும் ,தாபியீன்களின் அனேகரும் இக்கருத்தையே தேர்ந்தெடுத்து உள்ளனர் . அப்துல்லா இப்னு முபாரக் ,ஷாஃபி ,இஸ்ஹாக் ஆகியோறும் இதனையே கூறுகின்றனர் . (குறிப்பு :புகாரி ,முஸ்லிம் ,நஸயீ, அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது ) திர்மிதி - ஹதீஸ் எண்: 160 حَدَّثَنَا عَلِىُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ دَخَلَ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فِى دَارِهِ بِالْبَصْرَةِ حِينَ انْصَرَفَ مِنَ الظُّهْرِ وَدَارُهُ بِجَنْبِ الْمَسْجِدِ فَقَالَ قُومُوا فَصَلُّوا الْعَصْرَ. قَالَ فَقُمْنَا فَصَلَّيْنَا فَلَمَّا انْصَرَفْنَا قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « تِلْكَ صَلاَةُ الْمُنَافِقِ يَجْلِسُ يَرْقُبُ الشَّمْسَ حَتَّى إِذَا كَانَتْ بَيْنَ قَرْنَىِ الشَّيْطَانِ قَامَ فَنَقَرَ أَرْبَعًا لاَ يَذْكُرُ اللَّهَ فِيهَا إِلاَّ قَلِيلاً ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. நான் அனஸ் பின் மாலிக் அவர்களை பஸரா நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவர்கள் லுஹர் தொழுது விட்டு திரும்பிய நேரத்தில் சந்தித்தேன் அவரது இல்லம் பள்ளிக்கு அருகிலேயே இருந்தது. அப்போது அவர்கள் எழுங்கள் ! அஸர் தொழுங்கள் ! ஒருவன் சூரியன் மறையும் வரைக்காத்திருந்து அது சைத்தானுடைய இரண்டு கொம்புகளுக்கிடையே (மறையும்)போது எழுந்து இறைவனை குறைந்த அளவில் நினைவுகூர்ந்து நான்கு ரக அத்துகள் கோழி கொட்டுவது போல் தொழுதால் அந்த தொழுகை தான் முனாஃபிக் உடைய தொழுகையாகும் என்று நபி(ஸல்) கூற நான் செவியுற்றேன் என அனஸ் (ரலி) கூறியதாக அலாஃ இப்னு அப்துர் ரஹ்மான் குருப்பிடுகிறார் இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூ ஈசா கூறுகிறேன் (குறிப்பு : அபூதாவூதிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது )

திர்மிதி - ஹதீஸ் எண்: 161


حَدَّثَنَا عَلِىُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ عَنْ أَيُّوبَ عَنِ ابْنِ أَبِى مُلَيْكَةَ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَشَدَّ تَعْجِيلاً لِلظُّهْرِ مِنْكُمْ وَأَنْتُمْ أَشَدُّ تَعْجِيلاً لِلْعَصْرِ مِنْهُ.

நபி(ஸல்) அவர்கள் உங்களை விட லுஹரை முந்தி தொழுபவராக இருந்தனர் .நீங்கள் அவர்களை விட அஸர் தொழுகையை மிகவும் முந்தி தொழுகிறீர்கள் என உம்மு சலாமா (ரலி) அறிவிக்கிறார்கள் .

திர்மிதி - ஹதீஸ் எண்: 162


قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِىَ هَذَا الْحَدِيثُ عَنْ إِسْمَاعِيلَ ابْنِ عُلَيَّةَ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنِ ابْنِ أَبِى مُلَيْكَةَ عَنْ أُمِّ سَلَمَةَ نَحْوَهُ. وَوَجَدْتُ فِى كِتَابِى أَخْبَرَنِى عَلِىُّ بْنُ حُجْرٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ عَنِ ابْنِ جُرَيْجٍ.

ஹதீஸ் எண்:161வேறு அறிவிப்பாளர் வரிசையில்

திர்மிதி - ஹதீஸ் எண்: 163


وَحَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْبَصْرِىُّ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ عَنِ ابْنِ جُرَيْجٍ بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ. وَهَذَا أَصَحُّ.

ஹதீஸ் எண்:161வேறு அறிவிப்பாளர் வரிசையில்

திர்மிதி - ஹதீஸ் எண்: 164


حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ عَنْ يَزِيدَ بْنِ أَبِى عُبَيْدٍ عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُصَلِّى الْمَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ وَتَوَارَتْ بِالْحِجَابِ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ جَابِرٍ وَالصُّنَابِحِىِّ وَزَيْدِ بْنِ خَالِدٍ وَأَنَسٍ وَرَافِعِ بْنِ خَدِيجٍ وَأَبِى أَيُّوبَ وَأُمِّ حَبِيبَةَ وَعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ وَابْنِ عَبَّاسٍ. وَحَدِيثُ الْعَبَّاسِ قَدْ رُوِىَ مَوْقُوفًا عَنْهُ وَهُوَ أَصَحُّ. وَالصُّنَابِحِىُّ لَمْ يَسْمَعْ مِنَ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَهُوَ صَاحِبُ أَبِى بَكْرٍ رضى الله عنه. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ اخْتَارُوا تَعْجِيلَ صَلاَةِ الْمَغْرِبِ وَكَرِهُوا تَأْخِيرَهَا حَتَّى قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لَيْسَ لِصَلاَةِ الْمَغْرِبِ إِلاَّ وَقْتٌ وَاحِدٌ وَذَهَبُوا إِلَى حَدِيثِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- حَيْثُ صَلَّى بِهِ جِبْرِيلُ. وَهُوَ قَوْلُ ابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِىِّ.

சூரியன் மறைந்து அடிவானத்தில் அது மறைந்த போது நபி(ஸல்)அவர்கள் மஃரிப் தொழுபவர்களாக இருந்தனர் என்று சலாமா இப்னுல் அக்வஃ(ரலி) அறிவிக்கிறார்கள். ஜாபிர்(ரலி), ஸூநாபிஹி (ரலி), ஸைத் இப்னு காலித் (ரலி),அனஸ்(ரலி), ராபிவு இப்னு கதீஜ் (ரலி) அபூ அய்யூப் (ரலி), உம்மு ஹபீபா (ரலி),அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிஃப் (ரலி),இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் இக்கருத்து அறிவிக்கப்படுகிறது . அப்பாஸ்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுததாக கூறாமல் அப்பாஸ்(ரலி) அவர்கள் இவ்வாறு செய்ததாகவும் அதுதான் மிகச் சரியானதாகும் ஸுனாபிஹி என்பவர் வழியாகவும் இது அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் நபி(ஸல்)அவர்களிடம் எதையும் செவியுற்றதில்லை அவர் அபூபக்கரின் தோழராக திகழ்ந்தவர் . ஸலமா இப்னுல் அக்வஃ (ரலி) அவர்களின் ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூ ஈசா கூறுகிறேன் நபித்தோழர்கள் தாபியீங்களில் உள்ள அறிஞர்களின் மிகப்பெரும்பான்மையினரின் கூற்று இது தான் .சில அறிஞர்கள் மஃரிப்க்கு ஒரே ஒரு நேரம் மட்டுமே உண்டு .நபி(ஸல்)அவர்களுக்கு ஜிப்ரீல்(அலை) தோழவைத்து காட்டிய ஹதீஸின் அடிப்படையில் மஃரிப்க்கு ஆரம்ப நேரம் கடைசி நேரம் என்றெல்லாம் இரண்டு நேரங்கள் கிடையாது என்று கூறுகின்றனர் இப்னுல் முபாரக் ,ஷாஃபி ஆகியோரின் கருத்து இது தான் என்று அபூ ஈசா கூறுகிறேன் (குறிப்பு : புகாரி ,முஸ்லிம் அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது )

திர்மிதி - ஹதீஸ் எண்: 165


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِى الشَّوَارِبِ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِى بِشْرٍ عَنْ بَشِيرِ بْنِ ثَابِتٍ عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ أَنَا أَعْلَمُ النَّاسِ بِوَقْتِ هَذِهِ الصَّلاَةِ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُصَلِّيهَا لِسُقُوطِ الْقَمَرِ لِثَالِثَةٍ ».

இந்த (இஷா) தொழுகையின் நேரத்தைப் பற்றி மற்றவர்களை விட நான்மிகவும் அறிந்தவன். மூன்றாம் பிறை மறையும் நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் அவர்கள் இத்தொழுகையைத் தொழுபவர்களாக இருந்தனர். என்று நுஃமான் இப்னுபஷீர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

திர்மிதி - ஹதீஸ் எண்: 166


حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ عَنْ أَبِى عَوَانَةَ بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ. قَالَ أَبُو عِيسَى رَوَى هَذَا الْحَدِيثَ هُشَيْمٌ عَنْ أَبِى بِشْرٍ عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ. وَلَمْ يَذْكُرْ فِيهِ هُشَيْمٌ عَنْ بَشِيرِ بْنِ ثَابِتٍ. وَحَدِيثُ أَبِى عَوَانَةَ أَصَحُّ عِنْدَنَا لأَنَّ يَزِيدَ بْنَ هَارُونَ رَوَى عَنْ شُعْبَةَ عَنْ أَبِى بِشْرٍ نَحْوَ رِوَايَةِ أَبِى عَوَانَةَ.

மேற்கூறிய ஹிஸ்தீஸ் மீண்டும் வேறு அறிவிப்பாளர் மூலம் அறிவிக்கப்படுகின்றது. அயூ அவானா என்பார் இடம்பெறும் (165 வது) ஹதீஸ் நம்மிடம் ஆதாரபூர்வமானதாகும். இதை வலுபடுத்தும் விதமாக யஸீத் இப்னு ஹாரூன் என்பார் வழியாக அறிவிக்கப்படுகிறது.

திர்மிதி - ஹதீஸ் எண்: 167


حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِىِّ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- « لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِى لأَمَرْتُهُمْ أَنْ يُؤَخِّرُوا الْعِشَاءَ إِلَى ثُلُثِ اللَّيْلِ أَوْ نِصْفِهِ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَأَبِى بَرْزَةَ وَابْنِ عَبَّاسٍ وَأَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ وَزَيْدِ بْنِ خَالِدٍ وَابْنِ عُمَرَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِى هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ الَّذِى اخْتَارَهُ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ وَغَيْرِهِمْ رَأَوْا تَأْخِيرَ صَلاَةِ الْعِشَاءِ الآخِرَةِ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ.

“என் சமுதாயத்திற்க்கு நாம் சிரமம் அளித்தவனாவேன் என்ற எண்ணம் இல்லையனில் இஷா தொழுகையை பாதி இரவு வரை அல்லது இரவில் மூன்றில் இருபகுதி முடிந்து ஒரு பங்கு இருக்கும் நேரம் வரை பிற்படுத்துமாறு நான் உத்தரவிட்டிருப்பேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஜாபிர் இப்னு சமுரா (ரலி) ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அபுபர்சா (ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) அபுஸையீத் அல்குத்ரி ஸைத் இப்னு காலித் இப்னு உமர் (ரலி) ஆகிய நபித்தோழர்கள் வழியாகவும் இக்கருத்து அறிவிக்கப்படுகின்றது. அபு ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் என்று அபு ஈஸா கூறிகிறேன். நபித்தோழர்கள் தாபீயீங்கள் மற்றும் பலரில் மிகபெரும்பாலான அறிஞ்சர்கள் இடையே தேர்வு செய்துள்ளனர் அஹ்மத் இஸ்ஹாக் ஆகியோரும் இதையே கூறியுள்ளனர். (குறிப்பு: அஹ்மத், இப்னு மாஜா, நஸயீயிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது)

திர்மிதி - ஹதீஸ் எண்: 168


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا عَوْفٌ قَالَ أَحْمَدُ وَحَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ هُوَ الْمُهَلَّبِىُّ وَإِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ جَمِيعًا عَنْ عَوْفٍ عَنْ سَيَّارِ بْنِ سَلاَمَةَ هُوَ أَبُو الْمِنْهَالِ الرِّيَاحِىُّ عَنْ أَبِى بَرْزَةَ قَالَ كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- يَكْرَهُ النَّوْمَ قَبْلَ الْعِشَاءِ وَالْحَدِيثَ بَعْدَهَا. قَالَ وَفِى الْبَابِ عَنْ عَائِشَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَأَنَسٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِى بَرْزَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَدْ كَرِهَ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ النَّوْمَ قَبْلَ صَلاَةِ الْعِشَاءِ وَالْحَدِيثَ بَعْدَهَا وَرَخَّصَ فِى ذَلِكَ بَعْضُهُمْ. وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ أَكْثَرُ الأَحَادِيثِ عَلَى الْكَرَاهِيَةِ. وَرَخَّصَ بَعْضُهُمْ فِى النَّوْمِ قَبْلَ صَلاَةِ الْعِشَاءِ فِى رَمَضَانَ. وَسَيَّارُ بْنُ سَلاَمَةَ هُوَ أَبُو الْمِنْهَالِ الرِّيَاحِىُّ.

இஷாவுக்கு முன் உறங்குவதையும், இஷாவுக்கு பின் பேசுவதையும் நபி(ஸல்) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர். என்று அபு பர்ஸா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆயிஷா(ரலி), அப்துல்லாஹ் இப்னு மசூது(ரலி), அனஸ்(ரலி) ஆகியோர் வழியாகவும் இக்கருத்து அறிவிக்கப்படுகின்றது அபு பர்ஸா(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் ஹஸன், ஸஹீஹ் எனும் தட்டில் அமைந்ததாகும் என்று அபு ஈஸா கூறிகிறேன். இஷாவுக்கு முன் உறங்குவதையும், இஷாவுக்கு பின் பேசுவதையும், அறிஞ்சர்களில் பலர் வெறுக்கின்றனர். இது விஷயமாக சிலர் அனுமதிக்கின்றனர். பெரும்பாலான ஹதீஸ்கள் ”கூடாது” என்பதையே கூறிகின்றன. என அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் கூறுகிறார்கள். ரமளான் மாதத்தில் மட்டும் உறங்குவதை சிலர் அனுமதிக்கின்றனர் என்று அபு ஈஸா கூறுகிறேன். (குறிப்பு: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபு தாவூத், நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

திர்மிதி - ஹதீஸ் எண்: 169


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَسْمُرُ مَعَ أَبِى بَكْرٍ فِى الأَمْرِ مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ وَأَنَا مَعَهُمَا. وَفِى الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَوْسِ بْنِ حُذَيْفَةَ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ. وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ الْحَسَنُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ رَجُلٍ مِنْ جُعْفِىٍّ يُقَالُ لَهُ قَيْسٌ أَوِ ابْنُ قَيْسٍ عَنْ عُمَرَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- هَذَا الْحَدِيثَ فِى قِصَّةٍ طَوِيلَةٍ. وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ فِى السَّمَرِ بَعْدَ صَلاَةِ الْعِشَاءِ الآخِرَةِ فَكَرِهَ قَوْمٌ مِنْهُمُ السَّمَرَ بَعْدَ صَلاَةِ الْعِشَاءِ وَرَخَّصَ بَعْضُهُمْ إِذَا كَانَ فِى مَعْنَى الْعِلْمِ وَمَا لاَ بُدَّ مِنْهُ مِنَ الْحَوَائِجِ وَأَكْثَرُ الْحَدِيثِ عَلَى الرُّخْصَةِ. وَقَدْ رُوِىَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ سَمَرَ إِلاَّ لِمُصَلٍّ أَوْ مُسَافِرٍ ».

நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின் அபூபக்ர்(ரலி) அவர்களுடன் முஸ்லிம்களின் விஷயமாக பேசிக்கொண்டிருப்பர்கள். அவர்களுடன் நானும் இருப்பேன் என்று உமர்(ரலி) அறிவிக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி), அவ்ஸ் பின் உதைபா(ரலி), இம்ரான் பின் ஹூலைன்(ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கிப்பட்டுள்ளது. உமர்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் ஹஸன் எனும் தரத்திலமைந்ததாகும். (இந்த ஹதீஸை உமர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கிறார். ஆனால் அல்கமா உமர்(ரலி) அவர்களை சந்தித்ததில்லை. இந்த வகையில் இது பலவீனமானது என்றாலும் உமர்(ரலி) விழியாக கைஸ, அல்லது இப்னு கைஸ் என்பவரும் அவர் வழியாக "அல்கமா" என்பவரும் அறிவிப்பதாகும் ஹதீஸ் உள்ளது. (இக்ட்ன் காரணமாக இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.) நபித்தோழர்கள், தாபியீன்கள் அவர்களுக்குப் வந்தோர்களில் அறிஞ்சர்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு செய்கின்றனர். இஷாவுக்குப் பின் எந்த பேச்சும் பேசலாகாது என்று சிலர் கூறிகின்றனர். கல்வி சம்பந்தமாகவும், அவசியமான காரியங்கள் சம்பந்தமாகவும் பேசலாம் என சிலர் கூறிகின்றனர். பெரும்பாலான ஹதீஸ்கள் இதை அனுமதிக்கும் விதமாகவே உள்ளன. என்று அபு ஈஸா கூறுகின்றார். இரவில் தொழுவதற்காக விழித்து கொண்டிருப்பவர்கள் பயணிகள் ஆகியோர் தவிர மற்றவர்கள் இரவில் பேசிக்கொண்டிருக்கலாகாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப் படுகிறது என்று அபு ஈஸா கூறிகிறார். (குறிப்பு: அஹ்மத், நஸயிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது

2 comments:

  1. Enter your comment... அஸ்ஸலாமு அலைக்கும் திருமதி ஹதீஸ் அத்தியாயம் 1 அத்தியாயம் 2 ஆக மொத்தம் 169 ஹதீஸ்கள் மட்டுமே கிடைத்தன மற்ற ஹதீஸ்கள் எனக்கு லிங்க் அனுப்பவும் ars.gng@gmail.com வாட்ஸ்அப் போன் நம்பர் +965 98832767

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி பரக்காத்துஹூ அத்தியாயம்-3 எப்போது பதி விடுவீர்கள் பதிவு செய்தால் என் ஈமெயில் ஐடிக்கு தெரியப்படுத்தவும்

    ReplyDelete

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .