Breaking News

பேரழிவுகள் தரும் தெளிவுகள்-பாகம் 01


இறைவனின் திருப்பெயரால்..

சமீப காலமாக அதிக அளவில் பேரழிவுகள் நடைப்பெற்று கொண்டிருக்கிற்து.அதில் அதிக அளவில் உயிர் சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டு மக்கள் தங்கள் வாழ்நாளில் குருவி சேர்த்தது போல் சேர்த்த தங்கள் உடைமைகளை இழந்து நிற்க கூடியதை பார்க்கிறோம்.
சமீபத்தில் ஏற்ப்பட்ட ஒரு சில அழிவுகள் சொல்ல வேண்டும் என்றால்...

1.தமிழகத்தின் கடலூர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் அருகே கரையைக் கடந்த 'தானே' புயலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர், ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

மணிக்கு நூற்று நாற்பது கிலோமீட்டர் வேகத்துடனான சூறைக்காற்றுடனும் மிகக் கடுமையான அடைமழையுடனும் தானே புயல் வெள்ளியன்று அதிகாலை கரையைக் கடந்துள்ளது.
புயலின் சமயத்தில் மீனவர் ஒருவர்
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

2.திருப்பூரில் வரலாறு காணாத வெள்ளம் - குடிசைகள் மூழ்கின; 10 பேர் பலி ? ;20 பேர் மாயம்
திருப்பூரில் இது வரை இல்லாத அளவிற்குள் நொய்யலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதில் 100 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தண்ணீரில் மூழ்கின, பல வீடுகள் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டன. வெள்ள நீரில் சிக்கிய 20க்கும் மேற்பட்டோர் மாயமானதாக அஞ்சப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி குழந்தைகள், பெண்கள் உள்பட 3 பேர் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். மேலும் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.
பார்க்க-தினமலர்

3.கொல்கத்தா மருத்துவமனை தீ - BBC

 இந்தியாவில் மேற்கு வங்க மாநில தலைநகர்கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 89 பேர் ...

கொல்கத்தா தீ விபத்து

4.சுனாமி

5.பூகம்பம்

6.இன்னும் எத்தனையோ அழிவுகள்

 இதுபோன்ற் அழிவுகளை பார்க்கும் போது சிலர் கடவுளை திட்டகூடிய நிலையையும் சிலர் கலிகாலம் என்று ஒதுங்க`நிலையையும்  சிலர் இந்த மாதிரி நிகழ்வுகள் எனக்கு எற்பட கூடாது என்று இறைவனிடம் பிராத்திக்க கூடியதையும் பார்க்கலாம். 
  1. இந்த அழிவுகள் எதற்காக நடைப்பெறுகிறது?
  2. இந்த அழிவுகள் மூலமாக இறைவன் என்ன மக்களுக்கு   சொல்கிறார்?
  3. பேரழிவுகள் தரும் படிப்பினை என்ன?


என்பதை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இந்த கட்டுரையில் பார்ப்போம்..(இன்ஷா அல்லாஹ்)

1.எதற்காக பெரும் அழிவுகள் நிகழ்கிறது...

எந்த அழிவுகள் நேர்ந்தாலும் அதற்க்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக திருமறையில் இறைவன் கூறுகிறான்.
ஒன்று அந்த அழிவுகள் முலமாக நாம் திருந்த வேண்டும்.நம்மிடம் உள்ள தவறுகளை மற்றிக்கொள்ள வேண்டும்.
மற்றொன்று இறைவனின் தெளிவான சான்றுகளை கண்டும் நம்மிடம் உள்ள தீமைகளை தொடர்ந்து செய்து இறைவனின் கோபத்திற்க்கு ஆளாவது.

முதலாவது காரணம் குறித்து

இறைவனின் வார்த்தை திருமறை திருக்குர்ஆனில்.... 

وَلَقَدْ أَهْلَكْنَا مَا حَوْلَكُم مِّنَ الْقُرَى وَصَرَّفْنَا الْآيَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ -27,

உங்களைச் சுற்றி பல ஊர்களை அழித்துள்ளோம்.இவர்கள் திருந்துவதற்காக சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.(அல்குர்ஆன்-46:27)

இரண்டாவது காரணம் குறித்து

இறைவனின் வார்த்தை திருமறை திருக்குர்ஆனில்....  

وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِن قَبْلِكُمْ لَمَّا ظَلَمُواْ وَجَاءتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَمَا كَانُواْ لِيُؤْمِنُواْ كَذَلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ -13,

உங்களூக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறையினரை அழித்திருக்கிறோம்.அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர்.அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை.குற்றம் புரியும் கூட்ட்த்தை இவ்வாறே தண்டிப்போம்.(அல்குர்ஆன்-10:13)

மேலும், இறைவனின் வார்த்தை திருமறை திருக்குர்ஆனில்.... 

أَفَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّنَ الْقُرُونِ يَمْشُونَ فِي مَسَاكِنِهِمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّأُوْلِي النُّهَى -128,

அவர்களூக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம் என்பது அவர்களூக்கு நேர்வழியைக் காட்டவில்லையா? அவர்கள் குடியிருந்த இடங்களில் இவர்கள் நடக்கின்றனர்.அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.(அல்குர்ஆன்-20:128)

இன்றைக்கு ஏற்பட கூடிய இந்த அழிவுகளை நாம் காணும் போது நமது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்று இறைமறை பேசுகிறது.

இந்த கட்டுரையின் தொடர்ச்சி.......
1.எப்போது அழிவுகள் எற்படும்,2.எதற்க்காக எற்படும்,3.அழிவுகளில் இருந்து நம்மை காக்க,,  இறைவன் நாடினால்.....நாளை.மறுநாள்.....

தொகுப்பு S.ஷாஹிது ஒலி=unnmaygal.blogspot.com


3 comments:

  1. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    ---- >
    புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
    ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

    இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
    < ----

    ReplyDelete
  2. VANJOOR said....

    சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    ---- >
    புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.

    மிக்க நன்றி...அன்பு சகோதரரே....
    உங்கள் பணி சிறக்க அல்லாஹ் அருள் புரியவானாக....

    ReplyDelete
  3. VANJOOR said...

    சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    1.
    காணத்தவறாதீர்கள். உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி விடியோக்கள் .
    மழலைகள், சிறார்கள் குரான் ஓதும் விடியோக்கள்.

    .

    சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    2. ---- >
    புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.

    சிந்திக்க.


    திருக்குர்ஆனை முதலில் இருந்து
    கடைசி வரை தேடிப் பார்த்தாலும்,
    மற்றவர் பேரில்
    வெறுப்பை வளர்க்கும்
    வாசகங்கள் எதுவும் இல்லை.
    பிரச்னை குர்ஆனில் இல்லை.
    நம்மிடம்தான்.
    திறந்த மனதுடன் அதைப்
    படித்துப் பார்க்க விரும்பிய,
    என் கண்களைத் திறந்த
    என் தந்தையார் தீவிர வைணவர்.”
    - சுஜாதா

    (தினமணி ரம்ஜான் மலர் – 2003)

    நல்ல பதிவுகள்....

    நன்றி..http://vanjoor-vanjoor.blogspot.com/

    ReplyDelete

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .